Headlines
மண்டைக்காடு, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்

மண்டைக்காடு, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்

மண்டைக்காடு, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து 
02-09-2014
மண்டைக்காடு அருகே உள்ள லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய மாணவர் பேரவை தலைவராக சுஜின், செயலாளராக பிரவின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் குளச்சலில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது மாணவர்கள் கல்லூரிக்கு சென்றுவர வசதியாக மிடாலத்தில் இருந்து கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்நகர் வழியாக மண்டைக்காட்டிற்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும். லெட்சுமிபுரம் கல்லூரி முன் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரி ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டிட வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் சாமுவேல் சேகர், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜெங்கின் சுகின், மேற்கு மாவட்ட செயலாளர் அஜிகுமார், குளச்சல் நகர தலைவர் முனாப், ஜெயசீலன், பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: