Headlines
கன்னியாகுமரி மாவட்ட புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்

கன்னியாகுமரி மாவட்ட புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்

கன்னியாகுமரி மாவட்ட புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
24-09-2014
குமரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருபவர் நாகராஜன். இவர் சென்னையில் உள்ள மின் ஆளுமை இயக்குநராகவும், மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சஜ்ஜன்சிங் சவான் குமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குமரி மாவட்டத்தின் 49-வது கலெக்டர் ஆவார்.
சஜ்ஜன்சிங் சவான்
புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் சவான் இன்று அல்லது நாளை நாகர்கோவில் வந்து பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. புதிய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து கோவை வணிகவரி துறை இணை ஆணையராக பணிபுரிந்தார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: