Headlines
Loading...
கர்நாடாக கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற அழிக்கால் பகுதி மீனவர் பலி

கர்நாடாக கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற அழிக்கால் பகுதி மீனவர் பலி

கர்நாடாக கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற அழிக்கால் பகுதி மீனவர் பலி
26-09-2014 
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்ட்ரோஸ் என்பவரின் மகன் குமார் (வயது 27). இவர் கர்நாடாக மாநிலம் மங்கலாபுரம் கடற்கரையில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

கடந்த 18–ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது படகில் தவறி விழுந்து காயம் அடைந்தார். அவரை சக மீனவர்கள் கார்வார் துறைமுகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். 
இது பற்றிய தகவல் அழிகாலில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவாவில் இருக்கும் குமார் உடலை சொந்த ஊரான அழிக்காலுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் தலைவர் பாதிரியார் சர்ச்சில் மூலம் கோரிக்கை விடுத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: