Headlines
Loading...
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் மூழ்கிய தொழிலாளி உடல் கடியப்பட்டணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது

மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் மூழ்கிய தொழிலாளி உடல் கடியப்பட்டணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது

மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் மூழ்கிய தொழிலாளி உடல் கடியப்பட்டணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது
21-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் தம்பித்துரை டேனியல் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் தம்பி டேவிட் ராஜா டேனியல் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் சின்னவிளை கடலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்தனர்.
அனைவரும் அங்கு ஒரு பாறையில் நின்று கொண்டிருந்த போது ஆக்ரோசமாக வந்த அலை மோதியதில் தம்பித்துரை டேனியல், அவரது தம்பி மகன் அஸ்வின் டிஜியோ (வயது 13) ஆகிய இருவரும் கடலில் தவறி விழுந்தனர். இருவரையும் அலை கடலுக்குள் இழுத்து சென்றது. அருகில் இருந்தவர்கள் அஸ்வின் டிஜியோவை காப்பாற்றினர். தம்பித்துரை டேனியல் கடலில் மூழ்கி மாயமானார்.
3 நாட்களாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவரது உடல் கடியப்பட்டணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. உடலை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். பின்னர் அவரது உடலை கடற்கரை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: