Headlines
பஸ்நிலையத்தில் மாணவியை கிண்டல் செய்த வாலிபர்: உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பஸ்நிலையத்தில் மாணவியை கிண்டல் செய்த வாலிபர்: உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பஸ்நிலையத்தில் மாணவியை கிண்டல் செய்த வாலிபர்: உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
28-08-2014
திங்கள்நகர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர்,நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திங்கள்நகர் பஸ்நிலையம் வழியாக வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற வாலிபர் ஒருவர், அந்த மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி அழுதுகொண்டே வீட்டு வந்து நடந்த சம்பவத்தை கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள், பஸ்நிலையத்திற்கு அந்த மாணவியை அழைத்து கொண்டு சென்றனர். கிண்டல் செய்த வாலிபரை மாணவி அடையாளம் காட்டினார். உடனே உறவினர்கள் அந்த வாலிபரை பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அந்த மாணவியின் நலன்கருதி அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: