சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் பூஜை நடந்தது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் பூஜை நடந்தது
23-07-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், சாயரட்சை பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், சிறப்பு பூஜை ஆகியன நடந்தது.
மாலை 6 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அத்தாழ பூஜையும் நடந்தது. கோவிலில் காலையில் இருந்தே பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பகதர்கள் கடலில் கால் நனைத்துவிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
0 Comments: