Headlines
Loading...
மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுப.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுப.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுப.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
22-04-2014
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுப.உதயகுமார் மணவாளக்குறிச்சி மற்றும் சின்னவிளை பகுதிகளில் இன்று மாலை 2.30 மணி அளவில் இறுதிகட்ட தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
சுப.உதயகுமார் திறந்த ஜீப்பில் பொதுமக்களை பார்த்து வணக்கம் செலுத்தியபடி வாக்கு சேகரித்தார். அவருடைய வாகனத்தின் முன்னால் சுமார் 50 இருசக்கர மோட்டார் சைக்கிளில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த இளைஞர்கள், கட்சியின் சின்னமான துடைப்பத்தை ஏந்தியவாறு சென்றனர். இளைஞர்களும் ஆம்ஆத்மி கட்சியை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டனர்.
வேட்பாளர் மணவாளக்குறிச்சி பகுதிக்கு வரும்போது கடுமையாக மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்தவாறு வந்து வாக்கு சேகரித்தார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: