Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் ‘108’ ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மணவாளக்குறிச்சியில் ‘108’ ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மணவாளக்குறிச்சியில் ‘108’ ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
22-04-2014
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள சுனாமி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 30). இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இந்நிலையில் மகாலெட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வந்தது.
அதில் டிரைவர் தர்மர், மருத்துவ உதவியாளர் வாசுகி ஆகியோர் மகாலட்சுமியை வெள்ளிசந்தை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வரும்போது மகாலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமாகி ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் வாசுகி பிரசவம் பார்த்தார்.

பின்னர் மகாலட்சுமியை சிகிட்சைக்காக மணவாளக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: