Headlines
மணவாளக்குறிச்சியில் கார் மோதி, மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து விபத்து – போலீஸ்காரர் படுகாயம்

மணவாளக்குறிச்சியில் கார் மோதி, மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து விபத்து – போலீஸ்காரர் படுகாயம்

மணவாளக்குறிச்சியில் கார் மோதி, மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து விபத்து – போலீஸ்காரர் படுகாயம்
11-03-2014
கொல்லங்கோடு அருகே உள்ள எஸ்.டி.மாங்காடு வாவறை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பெனல் (வயது 30). இவர் நெல்லை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மண்டைக்காடு திருவிழா பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இவருக்கு மணவாளக்குறிச்சி பாலம் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அங்கு பணியில் இருந்த அவர் நேற்று மதியம் அம்மாண்டிவிளைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி பாலம் பகுதிக்கு புறப்பட்டார். பாலம் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளுடன் ஜாண்பெனல் கீழே விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜாண்பெனலின் கால் மற்றும் உடலில் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமத்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: