Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது
11-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசிக்கொடை விழா நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான நேற்று பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் வந்தது. 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 9.30 மணிக்கு யானை மீது களப பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் மற்றும் அலங்கார பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது.
சமய மாநாடு பந்தல் நிகழ்ச்சியில் மாலை 6 மணி முதல் சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு குமரி ரெத்ன பிரியா பக்தி இசைக்குழு வழங்கிய சிந்தனை சிரிப்பு பக்தி இன்னிசை பாட்டுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: