Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தரிடம் திருட்டு – பெண் கைது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தரிடம் திருட்டு – பெண் கைது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தரிடம் திருட்டு – பெண் கைது
08-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தற்போது மாசிக்கொடை விழா நடைபெற்று வருகிறது. கொடைவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநில பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். நேற்று வலியபடுக்கை பூஜை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்த அனந்தபத்மநாபன் (வயது 30) என்பவர் இரவு 8 மணிக்கு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவரது அருகில் இருந்த ஒரு பெண், அனந்தபத்மநாபன் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொண்டிருந்தார். இதை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். உடனடியாக விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த துளசி என்பவரது மனைவி ரமா (வயது 50) என்பது தெரியவந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி அனந்தபத்மநாபன் சட்டை பாக்கெட்டில் இருந்து 1300 ரூபாயை திருடிய தெரிய வந்தது. ஏற்கனவே இவர் மீது திருட்டு வழக்கு இருந்ததும் தெரியவந்தது. மண்டைக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து ரமாவை கைது செய்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: