Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10-ம் நாள் விழாவில் குவிந்த பக்தர்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10-ம் நாள் விழாவில் குவிந்த பக்தர்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10-ம் நாள் விழாவில் குவிந்த பக்தர்கள்
12-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10-ம் நாள் திருவிழாவான நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். இதற்காக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சமையல் செய்து மதியம் சாப்பிட்டனர். கோவில் சுற்றியுள்ள கடைவீதிகளில் இடைவெளி இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரை சாலை மற்றும் கடற்கரையிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.



போட்டோஸ
புதியபுயல் முருகன்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: