Headlines
Loading...
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டார்
24-02-2014
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டார்.

அதிமுக போதுசெயலாளரும், தமிழக முதலைச்சருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் தனது சொந்த செலவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கோதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நேற்று காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீடூழி வாழவேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்த பூஜை வழிபாட்டில் அமைச்சர் கே.டி.பச்சைமால் கோவிலுக்கு பசுவும், கன்றையும் தானமாக வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: