Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் மாலை நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் மாலை நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் மாலை நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
24-02-2014
மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் மாலை நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு நடந்தது.

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுத்திடவும், குளச்சல் மற்றும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை துரிதப்படுத்திடவும், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் பத்திரபதிவு அலுவகலம் இடமாற்றம் செய்ய இருப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் குட்டிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ஆர்ப்பாட்டத்தை துவங்கிவைத்தார். இதில் எஃப்.எம்.ராஜரெத்தினம், செல்லப்பன், வட்ட செயலாளர் துரைமணி, அப்துல்ரகீம், செல்வகுமார், இஸ்தோர், லீனஸ், கொஞ்சீஸ், சுல்தான்கண், குலாம்மைதீன், சுந்தர்ராஜ், சீலன், முகமது முபீன், சுரேஷ், ஜஸ்டின்ராஜா, நாசர் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




செய்தி மற்றும் போட்டோ
மணவை முருகன்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: