Headlines
Loading...
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா நிகழ்ச்சிகள்
26-02-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை (1189 மாசி 18 – 27) 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு,
1-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், கல்லடிவிளை விஜயன் வழங்கும் ஸ்ரீபகவதி செண்டைமேளம் குழுவினரின் சிறப்பு செண்டைமேளமும், காலை 7 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6.30 மணிக்கு வானொலி புகழ் திருப்பதிசாரம் சிவசங்கரன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு வக்கம் ஸ்ரீதுர்க்கா தேவி கதகளியோகம் “கதகளி” நிகழ்ச்சியும் நடக்கிறது.

3-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாலை 3 மணிக்கு கீழக்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு கொத்தனார்விளையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்வும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார்கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், இரவு 1 மணிக்கு வலியபடுக்கை (மஹாபூஜை) நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
7-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு பாலப்பள்ளத்தில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், மாலை 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும் நடக்கிறது. 8-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு செம்பொன்விளையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், இரவு 9.30 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெறுகிறது. 9-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா ஆலயத்திலிருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ம் நாள் விழாவில் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான்கோவிலிருந்து யானை மீது களபம் பவனி வருதலும், காலை 5 மணிக்கு அடியாந்திர பூஜை-குத்தியோட்டம் நிகழ்வும், இரவு 10 மணிக்கு அய்யம்பாறவிளை குழுவினரின் ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து நிகழ்வும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், அதை தொடர்ந்து தீபாராதனையும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: