Headlines
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கியது
17-08-2013
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 16-08-2013 முத்ல் 25-08-2013 வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ் மாலையுடன் திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு களிமார் பங்குதந்தை மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்கினார்.
3-ம் நாள் நிகழ்வில் மறைக்கல்வி மன்ற விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 6-ம் நாள் நிகழ்ச்சியில் சமபந்தி நடைபெறுகிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழாவும், இரவு 8.30 மணிக்கு கோல்டன் ஆர்கெஸ்ட்ரா வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நடைபெறும் திருவிழாவில் ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. திருவிழா நிகழ்வுகளை படர்நிலம் பங்கு பேரவை மக்கள், பங்கு அருட்பணி பேரவை அருட்தந்தை அந்தோனியப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.


செய்தி மற்றும் போட்டோஸ்
டைசன், B.A.,B.Ed., முதுகலை வரலாற்றுத்துறை மாணவர்,
இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: