Headlines
மணவாளக்குறிச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது

மணவாளக்குறிச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது

மணவாளக்குறிச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில்
சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
16-08-2013
மணவாளக்குறிச்சியில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9 மணி அளவில் ஆட்டோ ஸ்டாண்ட் மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்
தேசியக்கொடியை ஏற்றிவைத்த காட்சி
மணவாளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நிஷாம் தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுனர்கள் முருகானந்தம், ரெஜிகுமார், ராஜரெத்தினம், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்டோ ஓட்டுனர் ஜவஹர்லா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பேருந்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: