Headlines
சென்னை அருகே மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விபத்தில் மரணம்

சென்னை அருகே மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விபத்தில் மரணம்

சென்னை அருகே 
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விபத்தில் மரணம்
26-07-2013
மணவாளக்குறிச்சி பீச்ரோடு குழிவிளை பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 59). இவர் மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பின்னர் சென்னை அருகே ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்தார்.
இஸ்மாயில்
இந்நிலையில் இவர், இவருடைய உறவினர் ஒருவருடன் 21-ம் தேதி அன்று அதிகாலை வேளையில் பள்ளிவாசலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை, இவருடைய உறவினர் ஓட்ட, இவர் பின்னால் அமர்ந்து சென்றதாக தெரிகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மாடுகள் நின்று கொண்டு இருந்ததை கவனிக்காமல் வாகனத்தை ஓட்டியவர், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மாடு மீது பயங்கரமாக மோதிவிட்டார்.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த இஸ்மாயில் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தார். வாகனத்தை ஒட்டிய உறவினரும் காயம் அடைந்தார். விபத்து நடந்தது அதிகாலை என்பதால் இருவரையும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லவில்லை என தெரிகிறது.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இஸ்மாயில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிட்சை அளித்தும், அவர் சுயநினைவு திரும்பவில்லை எனத்தெரிகிறது.

இந்நிலையில் இன்று (26-ம் தேதி) அதிகாலை 4.30 மணி அளவில் அவர் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அவருடைய உடல் இன்று இரவு சென்னையில் இருந்து மணவாளக்குறிச்சிக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை காலை 9 மணி அளவில் அவருடைய உடல் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: