Headlines
மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் சவுதிஅரேபியாவின் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் சவுதிஅரேபியாவின் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் சவுதிஅரேபியாவின் மரணம்
14-06-2013
மணவாளக்குறிச்சி தேங்காய்கூட்டுவிளையை சேர்ந்தவர் ஷாஜஹான் (வயது 43). இவருக்கு மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஷாஜஹான் சவுதிஅரேபியாவில் அபஹா என்னும் இடத்தில் வேலை பார்த்து வந்தார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
ஷாஜஹான்
ஷாஜஹான் வேலை பார்த்து வந்தபோது, அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (12-06-2013)  இரவு இந்திய நேரப்படி 11 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்தாக தெரிகிறது. அதனை தொடர்ந்து அவர் கீழே விழுந்து இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள், மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனால் மணவாளக்குறிச்சியில் உள்ள ஷாஜஹான் குடுப்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மேலும் அவரின் உறவினரிடம் விசாரித்தபோது, “அவரது உடல் சொந்த ஊருக்கு வருவது கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது. எனவே சவுதியிலேயே அவரது உடல் அடக்கம் செய்வதாக தெரிகிறது” என்று கூறினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: