Headlines
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பலி
12-06-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிசந்தை சரல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் லியாண்டர் (வயது 14). இவரும் ஒற்றைக்கால் குடியை சேர்ந்த லூயிஸ் மகன் அஜித்தும் (வயது 16) ஒரு மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று பேயோட்டில் இருந்து வெள்ளிசந்தைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஈத்தங்காடு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் லியாண்டரும், அஜித்தும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
அங்கி சிகிச்சை பலனளிக்காமல் லியாண்டர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதற்கிடையே சிகிச்சை பெற்றுவந்த அஜித் நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இது குறித்து வெள்ளிசந்தை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: