Headlines
மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்

மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்

மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்
31-05-2013
தமிழகத்தில் ஏப்ரல் 2013-ல் நடைபெற்ற  எஸ்.எஸ்.எல்.சி  தேர்வு முடிவுகள் இன்று (31-05-2013) காலையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் முதல் இடத்தை 9 பேர் பிடித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பின்வருமாறு:-

மணவாளக்குறிச்சி ஒயிட் பீல்ட் பேக்கரி அதிபர் ரபீக் மகள் சஃப்னா 486 மதிப்பெண்கள் எடுத்து முஹல்லத்தில் முதல் இடத்தையும், மணவாளக்குறிச்சி குழிவிளையை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் மகன் எம்.எஃப்.அப்துர் ரஹ்மான் 484 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
மூன்றாமிடத்தை மணவாளக்குறிச்சி குழிவிளையை சேர்ந்த வாஹித் மகன் ஆதிலும், மணவாளக்குறிச்சி மிசிட்விளையை சேர்ந்த குலாம் மகன் ரியாஸ் கபூர் ஆகிய இருவரும் தலா 480 மதிப்பெண்கள் பெற்றனர்.

முதல் இடம் மற்றும் 2-ம் பிடித்த சஃப்னா, அப்துர் ரஹ்மான் ஆகியோர்  மண்டைக்காடு புதூர் மரிய ரபோல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், 3-ம் இடம் பிடித்த ஆதில் குளச்சல் செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளியிலும், ரியாஸ் கபூர் நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளியிலும் பயின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களும், மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லத்தை சேர்ந்தவர்களும், நண்பர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: