Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் சுன்னத்வல் ஜமாஅத் நடத்திய மாபெரும்  இஸ்லாமிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது

மணவாளக்குறிச்சியில் சுன்னத்வல் ஜமாஅத் நடத்திய மாபெரும் இஸ்லாமிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது

மணவாளக்குறிச்சியில் சுன்னத்வல் ஜமாஅத் நடத்திய மாபெரும்
இஸ்லாமிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது
01-04-2013
மணவாளக்குறிச்சியில் சுன்னத்வல் ஜமாஅத் நடத்திய மாபெரும் இஸ்லாமிய விளக்க பொதுக்கூட்டம் 31-03-2013 அன்று இரவு 7 மணி அளவில் துவங்கியது. கூட்டத்திற்கு மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத்-தை சார்ந்த எஸ்.நூருல் அமீன் தலைமை தாங்கினார்.
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் நடந்த போது எடுத்த படம்
நிகழ்ச்சி துவக்கத்தில் மௌலவி அல்ஹாபிழ் எம்.சிகாபுதீன் மஸ்லஹி கிராஅத் ஓதினார். மௌலவி தாஜுத்தீன் அஹ்ஸனி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்புரை நிகழ்ச்சியில் மௌலவி எஸ்.செய்யித் அப்துர் றஹ்மான் அஹ்ஸனி தங்ஙள் மற்றும் மௌலவி எம்.நிஸாமுத்தீன் அஹ்ஸனி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சி முடிவில் குமரி மாவட்ட எஸ்.எஸ்.எப். செயலாளர் மௌலவி எஸ்.ஷரபுத்தீன் அஸ்ஹரி நன்றியுரை வழங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவரின் ஒருபகுதியினர்
நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: