Headlines
Loading...
தக்கலை அருகே சிறுமியை கற்பழிக்க முயன்ற முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

தக்கலை அருகே சிறுமியை கற்பழிக்க முயன்ற முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

தக்கலை அருகே சிறுமியை கற்பழிக்க முயன்ற முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு
18-04-2013
தக்கலை அருகே உள்ள மூலச்சல் வடலிவிளையை சேர்ந்தவர் சார்லி என்ற ரெத்தினதாஸ் (வயது 65). இவர் 29.6.2008 அன்று காலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கருவேப்பிலை பறிப்பதற்காக சென்றார்.

அப்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தனர். வீட்டில் 10 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி தனிமையில் இருப்பதை பார்த்ததும் சார்லியின் மனதில் தவறான எண்ண ஓட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை தனது வீட்டிற்கு சார்லி தூக்கிச்சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். உடனே, சத்தம் போட்டால் உன்பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்றும் சார்லி மிரட்டியுள்ளார். இதில் மிரண்டு போன சிறுமி, வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மநாபபுரம் உதவி அமர்வு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உதவி அமர்வு நீதிபதி பூர்ண ஜெயானந்த், “சிறுமியை கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட முதியவர் சார்லிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து“ தீர்ப்பு கூறினார்.
Thanks To Dailythanthi

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: