Headlines
மணவாளக்குறிச்சி அருகே நகையை பறிக்க முயன்ற திருடனை கடித்த பெண்

மணவாளக்குறிச்சி அருகே நகையை பறிக்க முயன்ற திருடனை கடித்த பெண்

மணவாளக்குறிச்சி அருகே
நகையை பறிக்க முயன்ற திருடனை கடித்த பெண்
காயத்துடன் தப்பி ஓட்டம்
06-03-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் பத்ரோஸ். இவரது மனைவி சோபி (வயது 35). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்கு அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சோபியின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்தார். அதே நேரத்தில் சோபி லேசாக விலகி கொண்டதால் கோபமடைந்த வாலிபர், அவரை தாக்கியுள்ளார்.

பின்னர் கூச்சல் போடாமல் இருக்க சோபியின் வாயை கையால் பொத்தி நகையை பறிக்க அந்த வாலிபர் முயற்சி செய்துள்ளார். இதில் உஷாரான சோபி அந்த வாலிபரின் கைகளில் சராமாரியாக கடித்து வைத்தார். இதை எதிர்பார்க்காத அந்த வாலிபர் வலிதாங்காமல் சோபியை மீண்டும் தாக்கியுள்ளார். இருப்பினும் அந்த வாலிபருடன் சளைக்காமல் சோபி போராடியுள்ளார். இதில் அவரது பல் உடைந்து வாயில் இருந்து இரத்தம் கொட்ட தொடங்கியது.
இதற்கிடையே திருடன், திருடன் என்று சோபி சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் ரத்தகாயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அக்கம் பக்கத்தவர் அங்கு வந்து பார்த்தபோது சோபி காயங்களுடன் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டுஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து மண்டைக்காடு போலீசார்காயம் அடைந்த சோபிஇடம் விசாரணை நடத்தினர். அப்போது நகை பறித்த அந்த வாலிபர் அதேபகுதியை சேர்ந்தவர் தான் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: