Headlines
Loading...
நாகர்கோவிலில் பாஸ்போர்ட்டு பிரிவு 31–ம் தேதிக்கு பிறகு செயல்படாது - கலெக்டர் தகவல்

நாகர்கோவிலில் பாஸ்போர்ட்டு பிரிவு 31–ம் தேதிக்கு பிறகு செயல்படாது - கலெக்டர் தகவல்

நாகர்கோவிலில் பாஸ்போர்ட்டு பிரிவு 31–ம் தேதிக்கு பிறகு செயல்படாது - 
கலெக்டர் தகவல்
28-03-2013
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பாஸ்போர்ட்டு பிரிவு 31–3–2013–க்கு பிறகு செயல்படாது என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, 1–4–2013 முதல் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் இங்கு பெறப்படமாட்டாது. 

பாஸ்போர்ட்டு தேவைப்படும் மக்கள் நெல்லை மற்றும் மதுரையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவா கேந்திரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர், ஆன்லைனில் விண்ணப்பித்து விரைவில் பாஸ்போர்ட்டு பெறுவால் அலுவலகம் மூலம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால்தான் பாஸ்போர்ட்டு பிரிவு அலுவலகம் செயல்படாமல் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: