Headlines
தற்கொலை செய்த நர்சு எழுதிய கடிதத்தை போலீசார் மறைப்பதாக கணவர் குற்றச்சாட்டு

தற்கொலை செய்த நர்சு எழுதிய கடிதத்தை போலீசார் மறைப்பதாக கணவர் குற்றச்சாட்டு

தற்கொலை செய்த நர்சு எழுதிய கடிதத்தை போலீசார் மறைப்பதாக கணவர் குற்றச்சாட்டு
11-01-2013
வேர்க்கிளம்பி ஒட்டலிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). வேர்க்கிளம்பி பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி சுபா ஜாஸ்மின்(வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு சுபாஜாஸ்மின் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபா ஜாஸ்மின் இறந்து போனார். 

சுபா ஜாஸ்மினின் சாவுக்கு அவர் வேலை பார்த்த ஆஸ்பத்திரியை நடத்தும் பெண் டாக்டரின் கணவர் தான் காரணம் என அவரது கணவர் கண்ணன் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நான் சுபா ஜாஸ்மினை உயிருக்கு உயிராக காதலித்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். பல்வேறு தடைகளை தாண்டி தான் எங்கள் திருமணம் நடந்தது. 
திருமணத்துக்கு பின்பு சுபாவுக்கு பெண் டாக்டர் ஒருவரின் கணவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சுபாவை தனது மனைவி நடத்தும் மருத்துவமனைக்கு வேலைக்கு அழைத்தார். இதனால் சுபா அங்கு நர்சு பணிக்கு சென்றார். டாக்டர் இல்லாத நேரத்தில் அவரது கணவர் எனது மனைவியுடன் தனியாக பல இடங்களுக்கு ஊர் சுற்றி வந்துள்ளார். அப்போது பெண் டாக்டரின் கணவர் சுபாவுடன் நெருக்கமாக பழகியதை படம் பிடித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் சுபா அவரிடம் இருந்து விலக நினைத்தார். அப்போது டாக்டரின் கணவர், சுபா தன்னுடன் நெருக்கமாக இருந்த படம், வீடியோக்களை காட்டி மிரட்டினார். 
தொடர்ந்து எனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் சுபா மனமுடைந்து போனார். அதோடு, பெண் டாக்டரின் கணவர் அந்த வீடியோவை மேலும் சிலருக்கு பரப்பி இருக்கிறார். அதை வைத்து மேலும் 4 பேர் சுபாவை தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளனர். 
பெண் டாக்டரின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் கொடுத்த செக்ஸ் டார்ச்ச ரால் தான் எனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே எனது மனைவி சாவுக்கு காரணமான பெண் டாக்டரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
கண்ணன் இதுதொடர்பாக திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார். ஆனால் போலீசார் வெறுமனே தற்கொலை வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்து விட்டதாகவும், முறையாக விசாரிக்காமல் இருப்பதாகவும் கண்ணன் குற்றம் சாட்டினார். போலீசார் முதல் நாள் விசாரணை நடத்தும் போது சுபா எழுதி வைத்திருந்த கடிதங்களை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் சுபா தனது சாவுக்கு காரணமானவர்கள் யார்? எதனால் தான் தற்கொலை செய்கிறேன்? என்பது போன்ற விவரங்களை எழுதி வைத்திருப்பார், ஆனால் போலீசார் அந்த கடிதத்தை மறைக்கின்றனர் என்பதும் கண்ணனின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: