Headlines
மணவாளக்குறிச்சியில்  பிளஸ் – 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சியில் பிளஸ் – 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சியில் 
பிளஸ் – 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை
19-01-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் சாந்தா ஹெலன். இவர் மணவாளக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஆரோக்கிய திவ்யா ஷானு (வயது 17). இவர் மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.

நேற்று ஆரோக்கிய திவ்யா ஷானுவின் தாயார் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆரோக்கிய திவ்யா ஷானு வீட்டு மாடியில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: