Headlines
முட்டம் சகல புனிதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

முட்டம் சகல புனிதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


முட்டம் சகல புனிதர் ஆலய திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
01-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டத்தில் சகல புனிதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திருவிழா கடந்த 30-ம் தேதி மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. குளச்சல் வட்டார முதல்வர் ஜோசப் ஜஸ்டஸ் கொடியேற்றினார். பங்குபேரவை துணைத்தலைவர் ராஜ், பொருளாளர் சிம்சன், பொருளாளர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2-ம் நாளான நேற்று மாலையில் டைனிசியஸ் அடிகளார் தலைமையில் ஆராதனை நடந்தது. இதில் 9 அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆடம்பர கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் குளச்சல் மண்டல குருக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது.
இன்று (01-ம் தேதி) காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையில் திருநாள் திருப்பலி நடைபெற்றது. முட்டம் பங்கை சார்ந்த குழந்தைகளுக்கு முதல் நற்கருணை விருந்து வழங்கப்பட்டது. 
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை சார்லஸ் பொரோமியா, இணை பங்குதந்தை அமல்ராஜ் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment

  1. செய்திகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete