Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: 3 பேர் மீது வழக்கு பதிவு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: 3 பேர் மீது வழக்கு பதிவு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி:
3 பேர் மீது வழக்கு பதிவு
09-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்படி வருக்கத்தட்டு பகுதியை சேர்ந்த 35 வயது இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் காலையில் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வருக்கத்தட்டு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் அந்த இளம்பெண்ணை வழிமறித்ததோடு, அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே, அந்த பெண் விஷ்ணுவிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடி சென்றார். இதனை தொடர்ந்து விஷ்ணுவின் நண்பர்களான ஷாஜி, வேலு ஆகியோர் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து, ஏட்டு சதாசிவம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, ஷாஜி, வேலு ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: