Headlines
Loading...
முட்டம் கலங்கரை விளக்கம் அருகே வாலிபர் பிணம்

முட்டம் கலங்கரை விளக்கம் அருகே வாலிபர் பிணம்

முட்டம் கலங்கரை விளக்கம் அருகே
அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
யார் அவர்? போலீஸ் விசாரணை
22-10-2012
முட்டத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேற்கு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் நுர்நாற்றம் வீசியது. இதுபற்றி, அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்ற வாலிபர்கள் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முஹம்மது தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
பிணமாக கிடந்தவர் யார் என தெரியவில்லை. அவர் கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், கரும்பச்சை கலரில் டி-சர்ட்டும் அணிந்திருந்தார். சட்டைப்பையில் ஜெபமாலை இருந்தது. அருகில் விஷமருந்தும், ஒரு தண்ணீர் பாட்டிலும் கிடந்தன. இதனால் அவர் விஷம் தின்று தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிணமாக கிடந்த வாலிபர்
இதைதொடர்ந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து, பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: