Headlines
Loading...
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசல் இமாம் திருமணம் நடந்தது

மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசல் இமாம் திருமணம் நடந்தது

மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசல் இமாம்
திருமணம் இன்று (21-ம் தேதி) நடந்தது
21-10-2012
மணவாளக்குறிச்சி முஸ்லிம் பள்ளிவாசல் இமாம் ஆக இருப்பவர் மௌலவி அல்ஹாபிஸ் முஹம்மது அன்சார் ஆலிம் ரியாஸி அவர்கள். இவர் கேரள மாநிலம் காஞ்சாம்புரம் கலிங்கராஜபுரத்தை சேர்ந்த ஜனாப். முஹம்மது ஹனீபா அவர்களின் புதல்வர் ஆவார்.  

இவருக்கும், குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பெருந்தெருவை சேர்ந்த மௌலவி முஹம்மது அலி ஆலிம் மிஸ்பஹி மற்றும் ஸுஹரா பீவி தம்பதியரின் புதல்வியான ஆயிஷா பவுஸியா என்பவருக்கும் இன்று (21-10-2012) ஞாயிற்றுக்கிழமை (ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 5) திருவிதாங்கோடு பள்ளிதெருவில் அமைந்துள்ள S.N.O.M.M.T. Community Hall-ல் வைத்து மதியம் 12.00 - 12.30 வேளையில் திருமணம் நடைபெற்றது.  
இமாம் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 
மணவாளக்குறிச்சி முஹல்ல இஸ்லாமிய இளைஞர் பேரவையினர் 
இத்திருமணத்திற்கு குமரி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த பல பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல நிர்வாகிகள், முஹல்ல வாசிகள் கலந்து கொண்டனர். 

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: