Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் மின்தடையை கண்டித்து மாலை நேர தர்ணா

மணவாளக்குறிச்சியில் மின்தடையை கண்டித்து மாலை நேர தர்ணா

மணவாளக்குறிச்சியில்
மின்தடையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சார்பில் மாலை நேர தர்ணா
16-10-2012
தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற இடங்களில் தினமும் சுமார் 16 மணி நேரம் கடும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தமிழக மக்கள் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் பல போராட்டங்களை பல இடங்களில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணவாளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் மின்தடையை கண்டித்து 15-ம் தேதி அன்று மாலை நேர தர்ணா நடைபெற்றது. மாலை 5.30 மணி அளவில் இந்த தர்ணா நடந்தது.
தர்ணா போராட்டத்திற்கு ஜெயக்குமார் தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். தொடர்ந்து மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் புவனேந்திரன், தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். மேலும் மின்தடையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோர் கையில் மின்தடையை கண்டித்து கையில் தீபந்தம் ஏற்றி வைத்து கோஷங்களை எழுப்பினர். இந்த தர்ணா போராட்டத்தில் வார்டு உறுப்பினர் ஜெயந்த், செல்லநாடான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்ற இடையில் திடீரென மின்தடை ஏற்பட்டதால், இருளில் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சினர் நடத்தினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: