Headlines
மண்டைக்காட்டில் தீயில் கருகி அ.தி.மு.க. பிரமுகர் பலி: மோட்டாரை சரிசெய்தபோது பரிதாபம்

மண்டைக்காட்டில் தீயில் கருகி அ.தி.மு.க. பிரமுகர் பலி: மோட்டாரை சரிசெய்தபோது பரிதாபம்

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரதாஸ் (வயது 58). மண்டைக்காடு பேரூர் அ.தி.மு.க. அவை தலைவரான இவர், அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். சிதம்பரதாஸ் வீட்டில் இருந்த தண்ணீர் மோட்டார் திடீரென பழுதானது. இதனை சிதம்பரதாஸ் சரி செய்ய முயன்றார். இதற்காக மோட்டாரில் நைலான் கயிற்றில் தீயை பற்றவைத்து உருக்கி அதன் மீது ஊற்றி கொண்டிருந்தார்.
அவரது அருகே மண்எண்ணெய் கேன் இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண்எண்ணெய் கேன் சரிந்து விழுந்தது.

இதில் சிதம்பரதாஸ் மீது மண்எண்ணெய் சிதறி தீப்பிடித்து கொண்டது. இதனால், அவர் உடல் கருகி அலறினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் சிதம்பரதாசை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: