Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு, கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் சபீதா (வயது 17). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்தும் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சபீதாவை தேடி அவரது பெற்றோர் கல்லூரிக்கு வந்து தேடினர். அங்கும் அவர் இல்லை.

இதையடுத்து சபீதாவை உறவினர் வீட்டில் தேடி சென்றனர். அங்கும் அவர் இல்லை. மற்றும் பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் அவரது தாய் சரோஜா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்- இன்ஸ் பெக்டர் ஷோபா ஜென்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சபீதாவை தேடி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: