
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் துறைமுகம் சம்பந்தமான கூடுதல் தகவல்கள்
குளச்சல் துறைமுகம் சம்பந்தமான கூடுதல் தகவல்கள்
25-12-2015
குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிhpக்கா முதலிய நாடுகளில் இருந்து சூயஸ் கால்வாய் சீனா, ஜப்பான் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுக்கு செல்லும் கடற்பாதையாகும். மேலும் குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும் கடற்கரையில் 60 அடி ஆழம் உள்ள துறைமுகமாகும். குளச்சல் துறைமுகம் பூலோக பகுதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் கொச்சி, மங்ளூர், மார்கோவா, மும்பை, காண்டலா துறைமுகங்களும், கிழக்குப் பகுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா துறைமுகங்களும் அமைந்துள்ளது. குளச்சல் இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு நடுமையமாக பண்டக மற்றும் சரக்கு பாpமாற்றம் செய்ய தகுந்த துறைமுகமாக விளங்குகிறது.
தற்சமயம் இந்தியா வெளிநாடுகளில் உள்ள கொழும்பு மற்றும் துபாய், சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் இந்தியாவின் பொருட்கள் மற்றும் கன்டைனர்கள் பாpமாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. இதற்கு காரணம் இந்தியாவின் எல்லாத் துறைமுகங்களும் ஆழம் குறைந்தவை ஆனதால் 1,000,00 டன்களுக்கு குறைவான எடையுள்ள கப்பல்களே இந்திய துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றி இறக்க முடியும். இதன் காரணமாக பண்டக பாpமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இந்தியாவின் தெற்கு கோடியில் குளச்சலில் அமைவது மிகவும் தேவையாகிறது. குளச்சல் துறைமுகத்தில் 5,,,0 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களும் வந்து செல்ல வசதியும் ஆழமும் அதற்கேற்ற அமைப்பும் கொண்டது. இதன் காரணமாக 1995 – ம் ஆண்டு இந்திய கடல் போக்குவரத்து வல்லுநர்கள் இந்தியாவில் குளச்சல் துறைமுகத்தை பண்டக பாpமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக மாற்றி, வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கான கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூhpன் பண்டக பாpமாற்றம் செய்யும் பங்கை எடுத்துப் போட தீர்மானம் செய்தனர்.
குளச்சல் துறைமுகத்தை பண்டகப் பாpமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக 1998-ம் ஆண்டு டெசிட் என்ற துறைமுக அமைப்பு பாpந்துறைச் செய்தது. தமிழக அரசின் பாpந்துரைபடி மலேசியாவின் துறைமுக அமைப்பு நிறுவனம் 2001-ம் ஆண்டு குளச்சல் துறைமுகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு துறைமுக அமைப்பு மற்றும் ரோடுகள் மற்றும், ரயில் பாதை அமைப்பு, சம்மந்தமான மேம்பாடு பாpசோதனை மற்றும் ஆய்வுகள் செய்து குளச்சலில் பண்டக மற்றும் பண்டக மற்றும் பாpமாற்றம், செய்யும் பெருந்துறைமுகம் அமைக்க பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப hPதியான, சாதகமான அறிக்தை அளித்தது.
1.குளச்சல் பெருந்துறைமுகம் அமைக்கவும் அதற்கு முன் ஆய்வு அறிக்கைகள் திட்ட அறிக்கைகள், பாpசோதனை அறிக்கைகள் தயாhpத்து அதன்படி துறைமுகத்தை அமைக்கவும் சர்வதேச டென்டர்கள் சர்வதேச அளவில் பத்திhpகைகளில் வெளியிடப்படல் வேண்டும்.
2. குளச்சல் சரக்கு மற்றும் பெட்டக பாpமாற்றல் துறைமுகம் தன் முழு அளவு செயல்பாடு காலத்தில் 70இ000 தொழில் நுணுக்க வல்லுனர்களுக்கு வேலை அளிப்பதுடன் மறைமுகமாக 15 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன், 30இ000 கோடி ரூபாய்களுக்கு மேல் வெளிநாட்டு மூலதனம் துறைமுகம் மற்றும் ரோடு, ரயில்வே மற்றும் தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படும். ஆகையால் தென்தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் மேம்பாடு திட்டத்தை முழுமையாக கவனிக்க தமிழக அமைச்சரவையில் தனியாக ஓர் அமைச்சருக்கு பொறுப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
3. கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச பெருந்துறைமுகம் அமைப்பு திட்டத்தை மேற்பார்வையிட திரு.எம். விஜயகுமார் என்ற அமைச்சர் தனியாக பொறுப்பு வைப்பதால் துhpதமாக திட்டம் செயல்படுகிறது. சென்னையில் தமிழக செயலகத்தில் குளச்சல் துறைமுக முன்னேற்றம் சம்மந்தமாக கடந்த சில ஆண்டுகளாக எந்ந நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை, எந்த பொறுப்பான பதிலும் கொடுக்கப்படுவதும் இல்லை. ஆகையால் 3, கோடி ரூபாய்க்கு மேல் மூலதனத்துடன் செயல்பட போகிற குளச்சல் பெருந்துறைமுகமாக, திட்டத்தை செயல்படுத்த தமிழக செயலகத்தில் தனி பிhpவு அமைக்கப்படல் வேண்டும்.
4. குளச்சல் பெருந்துறைமுக் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே குளச்சல் மணவாளக்குறிச்சி கடற்பகுதியில் 500 ஏக்கர் அரசாங்;க நிலம் வள்ளியாறு முகத்துவாரத்திலிருந்து குளச்சல் மைனர் துறைமுகம் அலுவலகம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. குளச்சல் கடற்கரையில் அமைந்துள்ள இந்த 500 ஏக்கர் நிலம் குளச்சல் பெருந்துறை முகம் அமைக்க உடனடி தேவைகளுக்கு உபயோக படுத்தலாம். மேலும் தேவைப்படும் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் முடிந்த நிலையில் அவற்றிற்கான ஆவணங்;;கள், படவரைவுகள், ஏற்கனவே கல்குளம் தாலுகா அலுவலகம். அஸிஸ்ட்ன்ட் கலெக்டர், தக்கலை. (கன்னியாகுமாp மாவட்டம்) அலுவலகத்தில் உள்ளது. அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குளச்சல் பெருந்துறைமுக திட்டம் பக்கத்து துறைமுகங்;;களான சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்;களுக்கும், ஏனைய துறை முகங்;;களுக்கும், துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்;களுக்கும், ஏனைய துறை முகங்;களுக்கும், துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்;;களின் முன்னேற்றத்திற்கு உதவிடும்
0 Comments: