
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடைவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடைவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
19-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் எட்டாம் கொடைவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவதி அம்மனை சாமிதரிசனம் செய்தனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.40 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், 5.15 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6 மணிக்கு உஷ பூஜை மற்றும் உதயமார்த்தாண்டன் பூஜையும் நடைபெற்றது.

மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0 Comments: