Headlines
Loading...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 67 வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய வாகன யாத்திரை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 67 வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய வாகன யாத்திரை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 67 வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்ய வாகன யாத்திரை
18-02-2015
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வேண்டியும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுபடவும் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாகன யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாகன யாத்திரையில் செல்பவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மும்மத வழிபாட்டு தலங்களில் முக்கியமான 67 கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்ய உள்ளனர். வாகன யாத்திரை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு மாவட்ட நூற்பாலைத்தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். வாகன யாத்திரையை குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் என்.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். முன்னதாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன், பேரவை துணைச்செயலாளர் செல்வகுமார், தலைவர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயகுமார், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவி சத்யா தேவி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணக்குமார், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் ஜெயசீலன், மனோகரன், ஜெயச்சந்திரன், ஏ.சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை அனைத்து கோவில்களுக்கும் சென்று விட்டு 22-ம் தேதி காலை 6 மணிக்கு சென்னை சென்றடைகிறது. அங்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் அனைத்து கோவில் பிரசாதமும் வழங்கப்படுகிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: