Headlines
நாகர்கோவிலில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

நாகர்கோவிலில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

நாகர்கோவிலில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
23-09-2014
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடந்தன. 5–வது நாளையொட்டி குடும்ப விழா நடைபெற்றது.
குடும்ப விழா பொதுக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் ஏக நரேந்திரன், முத்துகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் சுப.திலகம், பிரதிநிதிகள் நாராயணமூர்த்தி, பகவதியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வராஜ், தொழிற்சங்க அடையாள அட்டையை வழங்கி பேசினார்.
விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ், மதுரை மாவட்ட தலைவர் கதிரேசன், நாகராஜன், பேராசிரியர்கள் என்.அழகேசன், ரம்யாஸ்ரீராம், பா.ஜனதா பிரமுகர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பேசினர். மாவட்ட செயலாளர் நாராயணன், பொருளாளர் மணிகண்டன், மகளிரணி செயலாளர் சரஸ்வதி, நிர்வாகிகள் முத்து, ஆறுமுகம், ரமேஷ், ராமதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Photos Murugan

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: