Headlines
மணவாளக்குறிச்சி அருகே இருந்து கடத்தப்பட்ட பட்டதாரி பெண் ஆரல்வாய்மொழியில் சிறைவைப்பு - மீட்க போலீசார் நடவடிக்கை

மணவாளக்குறிச்சி அருகே இருந்து கடத்தப்பட்ட பட்டதாரி பெண் ஆரல்வாய்மொழியில் சிறைவைப்பு - மீட்க போலீசார் நடவடிக்கை

மணவாளக்குறிச்சி அருகே இருந்து கடத்தப்பட்ட பட்டதாரி பெண் ஆரல்வாய்மொழியில் சிறைவைப்பு - மீட்க போலீசார் நடவடிக்கை
27-09-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்படி வண்ணான்விளையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிருந்தா(வயது 24). இவர் எம்.எஸ்சி. பி.எட் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். 

கடந்த 24-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி பிருந்தாவின் முகத்தில் துணியை போட்டு மூடி கடத்தி சென்று விட்டான். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று பிருந்தா, தனது தந்தை பெரியசாமிக்கு போன் பேசினார். அப்போது குருந்தன்கோடு மாவிளையை சேர்ந்த தங்ககிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் தன்னை கடத்தி வந்து ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு வீட்டில் சிறைவைத்து இருப்பதாக கூறினார். இதுகுறித்து பெரியசாமி மணவாளக்குறிச்சி போலீசுக்கு தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீசார் பிருந்தாவை மீட்க ஆரல்வாய்மொழி விரைந்துள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: