Headlines
மணவாளக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
19-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் சந்திரசேகர்(வயது 24). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்தார்.

நேற்றுமுன்தினம் சந்திரசேகர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து இருந்தார். அப்போது தனது தாயாரிடம் ‘‘எனக்கு அரசு வேலை கிடைக்க வில்லை. இதனால் எனக்கு நல்ல எதிர்காலம் இல்லை. தனக்கு வாழ பிடிக்க வில்லை’’ என்று கூறி வருத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அன்று மாலை சந்திரசேகர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தற்கொலை செய்ய குதித்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி சப்–இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, சேகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: