Headlines
இந்து நாடார் சேவா அறக்கட்டளை சார்பில் 13-வது குருபூஜை விழா மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டுவிழா நடந்தது

இந்து நாடார் சேவா அறக்கட்டளை சார்பில் 13-வது குருபூஜை விழா மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டுவிழா நடந்தது

இந்து நாடார் சேவா அறக்கட்டளை சார்பில் 13-வது குருபூஜை விழா மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டுவிழா நடந்தது
06-07-2014
இந்து நாடார் சேவா அறக்கட்டளை சார்பில் 13-வது குருபூஜை விழா மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டுவிழா இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள பௌர்ணமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
காலை 10 மணிக்கு நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். காலை 10.30 விழா சிறப்பு பேருரை நிகழ்வில் பொற்கிழி கவிஞர் நீலம் மதுமயன், அன்புவனம் பாலபிரஜாபதி அடிகளார், அகிலபாரத நாடார் அறக்கட்டளை தலைவர் வேணுகோபால், ஹைந்தவ சேவா கந்தப்பன், சிவா மருத்துவமனை டாக்டர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு 2013-14-ம் ஆண்டில் PhD, IAS, IPS, IFS, MBBS, BSMS மற்றும் வித்யா ஜோதி பட்டம் பெற்றவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டும் விழா நடந்தது. மதிய உணவுக்கு பின்னர் 2014-ம் ஆண்டில் 10-ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் கூடல்விளை பகுதியை சேர்ந்த எழில் ப்ரீத்தி மற்றும் அவரது தந்தை குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். முடிவில் அறக்கட்டளை செயலாளர் சுகுமாரன் நன்றியுரை வழங்கினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: