Headlines
மணவாளக்குறிச்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

மணவாளக்குறிச்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

மணவாளக்குறிச்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
08-04-2014
மணவாளக்குறிச்சியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கி அருகில் திமுக சார்பில் தேர்தல் அலுவலகம் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
பேரூர் தலைவர் குட்டிராஜன் தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்திரா, செல்லப்பன், சுல்தான், ஸ்தோர், குமார், முருகன், நிஜாம், முபீன், ராஜா போன்ற திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டணி கட்சிகளான எஸ்டிபிஐ நகர பொதுசெயலாளர் சலாவுதீன், நகர தலைவர் சாதிக், கிளை தலைவர் சபீக், துணைத்தலைவர் பகதூர்ஷா, நகர செயலர் நவுசாத், கிளை தலைவர் முஜீர், முஹம்மது அலி ஆகியோரும், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த செயலாளர் செய்யதுஅலி, தலைவர் ரபீக், பொருளாளர் அமீர்ஜகான், தஸ்தகீர், சாஹுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: