Headlines
Loading...
கடற்கரையோர கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கடற்கரையோர கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கடற்கரையோர கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு
22-04-2014
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தில் இருந்து திறந்த ஜீப்பில் பிரச்சாரத்தை துவங்கினார்.
தொடர்ந்து மணக்குடி, ராஜாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, அழிக்கால், முட்டம், கடியப்பட்டணம், மண்டைக்காடு, கொட்டில்பாடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். கடற்கரையில் மீனவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது,
மீனவர் பிரச்சினைக்காக ப.ஜனதா தொடர்ந்து போராடி வருகிறது. இலங்கை தமிழர்கள் தாக்குதலில் 578 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம். நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ம்மீனவர்கள் நலன் காக்கப்படும். மீனவர்கள் சிறை பிடிப்பது, தாக்கப்படுவதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்பு சுவர், குளச்சலில் மீனவர்கள் பாதிக்காத வகையில் வர்த்தக துறைமுகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: