Headlines
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீர் மரணம்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீர் மரணம்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீர் மரணம்
02-04-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் அனிகுட்டன் (வயது 28). இவர் மணவாளக்குறிச்சி மைய பகுதியில் செயல்பட்டு வரும் சஜி மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் சஜி என்பவரின் அண்ணன் மகன் ஆவார்.
Predheep Anikuttan
பட்டத்தாரியான இவர், தங்களுடைய மெடிக்கல் ஸ்டோரில் அவ்வப்போது சில வேலைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் பிரதீப் அனிகுட்டன் தன் உடம்பிற்கு சுகம் இல்லாமல் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து பிரதீப் அனிகுட்டனை ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளதாக தெரிகிறது. பிரதீப் அனிகுட்டன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரின் நல்லடக்கம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: