Headlines
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி சென்றது

மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி சென்றது

மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி சென்றது
06-03-2014
மனடைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த 2-ம் தேதி துவங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5-ம் நாள் திருவிழாவான இன்றைய நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை தொழிலாளர்கள் உபயமாக வழங்கினர்.
மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சியில் இருந்து யானை மீது களப பவனி சென்றது. இந்த பவனியில் செண்டைமேளம், சிலம்பாட்டம் மற்றும் களறி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. ஏராளமான பக்தர்கள் சந்தன குட ஊர்வலம் சென்றனர்.
மாலை 7 மணி அளவில் பவனி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து மாநாட்டு பந்தலில் சமய மாநாடு நிகழ்ச்சி நடந்தது. மாநாட்டில் கடலூர் மாவட்டம் எஸ்;கே.வைத்தியநாதன், ராஜபாளையம் வெள்ளத்துரை குமரி ரமேஷ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். நிகழ்ச்சியை எஸ்.செல்வராஜ் தொகுத்து வழங்கியதுடன் வரவேற்பு உரையும் வழங்கினார்.தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.



போட்டோஸ்
மணவை முருகன்
புதியபுயல்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment