Headlines
கடியப்பட்டணம் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

கடியப்பட்டணம் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

கடியப்பட்டணம் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்
18-03-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவில் வசிப்பவர் ரோஸ்மேரி (வயது 45). இவருடைய கணவர் பெர்க்மான்ஸ். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். ரோஸ்மேரிக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணாகி வெளியூரில் வசிக்கிறார்.
இடிந்து விழுந்த வீடு.
ரோஸ்மேரியின் வீட்டின் அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது. இதனால் பஸ்சில் பயணம் செல்பவர் பஸ்சுக்காக வீட்டின் அருகில் நிற்பது வழக்கம். அதேபோல் நேற்று மாலை 5 மணி அளவில் பஸ்சுக்காக சிலர் காத்திருந்தகாக கூறப்படுகிறது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் மேல்மாடியில் உள்ள ஸ்லாப் (மேற்கூரை) இடிந்து விழுந்து வீட்டின் அருகில் நின்றவர்கள் மேல் விழுந்தது.
இதில் வீட்டில் இருந்த ரோஸ்மேரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அமலா (வயது 35), ஜெயகுமார்(30), சேகர்(32) ஆகியோர் மீது வீடு விழுந்து படுகாயம் அடைந்தனர். அருகில் நின்ற மற்றவர்களில் சிலருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: