Headlines
மணவாளக்குறிச்சி கிளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாலை நேர தர்ணா நடைபெற்றது

மணவாளக்குறிச்சி கிளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாலை நேர தர்ணா நடைபெற்றது

மணவாளக்குறிச்சி கிளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாலை நேர தர்ணா நடைபெற்றது
23-08-2013
மணவாளக்குறிச்சி கிளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாலை நேர தர்ணா இன்று (23-08-2013) மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் வைத்து நடைபெற்றது.
தர்ணாவுக்கு புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். இராமசந்திரன், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்பிள்ளை, குமரி மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் ஆகியோர் பேசினர்.
தர்ணாவில் கனிம மணல் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டியும், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனுமதியின்றி கொள்ளையடித்த மணல் அளவு கேட்டும், மணல் ஆலையின் செயல்முறை தன்மை குறித்த தகவல்கள் பற்றியும் பேசப்பட்டது.

செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: