Headlines
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவரை கடல் அலை இழுத்து சென்றது - கதி என்ன?

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவரை கடல் அலை இழுத்து சென்றது - கதி என்ன?

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவரை
கடல் அலை இழுத்து சென்றது - கதி என்ன?
30-07-2013
மணவாளக்குறிச்சி படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் சைஜூ (வயது 24). இவர் மரக்கடை தொழிலாளி ஆவார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜாண்போஸ்கோ (வயது 24). இருவர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர்.

அங்குள்ள கடற்கரையில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அப்போது திடீரென வேகமாக வந்த ஒரு ராட்சத அலை சைஜூவையும், ஜாண் போஸ்கோவையும் இழுத்து சென்றது. இதில் ஜாண் போஸ்கோ அதிர்ஷ்டவசமாக தப்பித்து கரையேறி வந்தார்.ஆனால் சைஜூவை காணவில்லை. 
அவரை அலை இழுத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்ததும் குளச்சல் கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சைஜூவை தேடிவருகின்றனர்.

கடல் அலையில் சிக்கிய சைஜூவின் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: