Headlines
இரணியல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் சாவு

இரணியல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் சாவு

இரணியல் அருகே 
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் சாவு
18-03-2013
இரணியல் அருகே உள்ள நெய்யூர் மேல்கரையைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தினேஷ் (வயது 21). கட்டிட தொழிலாளி. கேரளாவில் வேலை செய்த இவர், ஊர் திரும்புவதற்காக தக்கலை பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து தொலைபேசியில் தனது ஊரைச் சேர்ந்த நண்பர் பாரத் (21) என்பவரை மோட்டார் சைக்கிள் எடுத்து வருமாறு அழைத்தார். பாரத் தனது ஊருக்கு அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

நண்பரின் அழைப்பை ஏற்று பாரத், அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தக்கலைக்கு சென்றார். பின்னர் நண்பரை பின்னால் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்தார். வழியில் கண்ணாட்டுவிளை பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் நண்பர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பாரத் நடுரோட்டில் விழுந்தார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தினேஷ் ரோட்டோரம் உள்ள குளத்தில் விழுந்தார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பாரத் பரிதாபமாக இறந்தார். தினேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: