Headlines
தீவிபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்

தீவிபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்

தீவிபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆறுதல்
18-03-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பம்மத்துமூலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 36). கடந்த 14-ம் தேதி இரவு 12 மணியளவில் இவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஐயப்பன், அவருடைய மாணவி மற்றும் 4 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீவிபத்தில் ஐயப்பனின் வீடு முழுவதுமாக எரிந்து சாமபலானது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும், பணமும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று வீடு இழந்த ஐயப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிவாரண உதவி வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதி அளித்தார்.
அவருடன் மாவட்ட பொதுசெயலாளர் எனல்ராஜ், மணவாளக்குறிச்சி பேரூர் தலைவர் குமார், பேரூர் கழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனிஷ், வட்டார பொதுசெயலாளர் எட்வின் ஜோஸ், குற்றாலம், தங்கநாடார், மனுபானு, சேமக்கண், பஷீர், லிபின்பாபு, அனில் குமார், சேகர், மத்தியாஸ் உள்பட பலர் வந்திருந்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: